அம்மன் நகர் பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழா
கோவை; கோவை அம்மன்குளம் அம்மன்நகர் வடக்கு பகுதியில் உள்ள, பண்ணாரி அம்மன் கோவில், 33ம் ஆண்டு குண்டம் திருவிழா நேற்று நடந்தது.
கடந்த மாதம், 24ம் தேதி பூக்கம்பம் நட்டு பூச்சாட்டு விழா துவங்கியது. இதை தொடர்ந்து 15 நாட்களாக, தினமும் அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் திருவிழா நேற்று துவங்கியது. பண்ணாரி அம்மன் சப்பரத்தில் அமர்ந்து, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சக்தி கரகத்துடன் முதன்மை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கினார். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து குண்டத்தில் இறங்கினர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, அருள் பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனுமதியின்றி பேட்டி கொடுக்க கூடாது: நிர்வாகிகளுக்கு அதிமுக வேண்டுகோள்
-
வக்ப் திருத்தச் சட்டம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர்!
-
வழக்கை திசை திருப்ப முயற்சி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
முனாப் படேலுக்கு அபராதம்
-
தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு
-
நீரஜ் சோப்ரா முதலிடம்: ஈட்டி எறிதலில் கலக்கல்
Advertisement
Advertisement