தாயமங்கலம் கோயில் பொங்கல் விழா நிறைவு

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் 10 நாட்களாக நடைபெற்ற பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இந்த வருடத்திற்கான விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களின் போது அம்மன் பல்வேறு அலங்காரங்களில் சிம்மம், அன்னம், கமலம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார்.

பங்குனி பொங்கல் விழா 5ம் தேதி,6ம் தேதி மின் அலங்கார தேர்பவனி, நேற்று முன்தினம் காலை பால்குடமும், இரவு 8:30 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:30 மணிக்கு பூ பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். நேற்று இரவு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்றது. பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், தாயமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாச்சாமி, சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் போஸ், பிராந்தமங்கலம் வெள்ளைச்சாமி தேவர் குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement