புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

தெரு நாய்களால் அச்சம்



ரிஷிவந்தியத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி திரிவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

-திருமால், ரிஷிவந்தியம்.

வாகன ஓட்டிகள் அவதி



வீரசோழபுரம், மாடூர் பகுதியில் சர்வீஸ் சாலைகளில் பயிர்களை காய வைக்கும் உலர்களமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

-சரவணன், கள்ளக்குறிச்சி.

ஆற்றில் கழிவு நீர் கலப்பு



கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கச்சிராயபாளையம்.

Advertisement