ஏப்., 12 ல் ரேஷன் குறைதீர் கூட்டம் 

சிவகங்கை, : அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஏப்., 12 ல் ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஏப்., 12 அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் குறைதீர் முகாமில், கார்டுதாரர்கள் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு, நகல், அலைபேசி எண் பதிவு, மாற்றம், ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்து புகார் செய்து பயன் பெறலாம், என்றார்.

Advertisement