மாஜி கவுன்சிலர் மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் மற்றும் 5 ஊழியர்கள் கடந்த 7ம் தேதி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட தென்னஞ்சாலை ரோட்டில் கால்நடைத்துறை மதில் சுவரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றி கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் மற்றும் 4 பேர் கொண்ட கும்பல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் திட்டினர்.

இதுகுறித்து, உதவி பொறியாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement