பல்லடத்தில் லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து; தம்பதி பலி

திருப்பூர்: பல்லடம் அருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பல்லடத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை ஏற்றிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸில் முருகனின் மனைவி கல்யாணி உள்பட 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது ஆம்புலன்ஸ் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நோயாளி முருகன் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஓட்டுநர் உரிமம் இல்லாத கவியரசன் என்பவர் ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (1)
R S BALA - CHENNAI,இந்தியா
11 ஏப்,2025 - 19:25 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல புதிய கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
மத்திய அரசு செயலாளர்கள் மாற்றம்: வருவாய்த்துறை செயலராக அர்விந்த் ஸ்ரீவஸ்தவா நியமனம்
-
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள்: அமலாக்கத்துறை முடக்கம்
-
திருமணம் அன்றே குழந்தை பிறந்தால் வேறு விதமாக தான் இருக்கும்: தி.மு.க., எம்.பி., கல்யாணசுந்தரம் பேச்சு
-
வேடசந்தூர் அருகே லாரி - கார் மோதல்: 3 பேர் பலி
Advertisement
Advertisement