ஏப்.15 வி.எச்.பி.,ஆர்ப்பாட்டம்

1

சென்னை:வி.எச்.பி., மாநிலத்தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அறிக்கை: தி.மு.க., அமைச்சர் பொன்முடி, ஹிந்து மத சின்னங்களை இழிவுபடுத்தும் வகையில், ஆபாசமாகப் பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலின், இதை தீவிரமாக கவனத்தில் வைத்து, அவர் போதிக்கும் மதச்சார்பின்மையை நிலைநிறுத்த வேண்டும்.


பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்தும், தி.மு.க., உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஏப்., 15ல், வி.எச்.பி., சார்பில், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

Advertisement