கிருபாபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

திருவெண்ணைநல்லுார், : திருவெண்ணைநல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

இக்கோவிலில் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை மற்றும் வீதியுலாவும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அறிவழகன் செய்திருந்தார். பேரூராட்சி சேர்மன் அஞ்சகம் கணேசன், துணைச் சேர்மன் ஜோதி உட்பட ஏராளமனோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement