மத்திய அரசின் திறனாய்வு தேர்வில் 217 பேர் தேர்ச்சி

ஈரோடு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ--மாணவிகளுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) ஆண்டுதோறும் மத்-திய அரசால் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு தேர்வு கடந்த பிப்.22ல் நடந்தது. ஈரோடு மாவட்-டத்தில், 6,607 பேர் எழுதினர். தேர்வு முடிவு நேற்று வெளியி-டப்பட்டது. இதில், 217 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்-கம்போல் பெருந்துறை வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு-நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 29 பேரில், 15 பேர் தேர்ச்சி பெற்றனர்.
* சென்னிமலை யூனியன் முகாசிபிடாரியூர் ஊராட்சி, சென்னியங்-கிரி வலசு அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த ஒன்பது மாண-வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement