மது கடத்திய 2 பெண்கள் கைது

திண்டிவனம்: திண்டிவனம் டவுன் சப்இன்ஸ்பெக்டர் செல்வதுரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை செஞ்சி ரோடு பஸ் நிறுத்தில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, புதுச்சேரிலிருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ் நிறுத்தி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த 2 பெண்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, 2 பெண்களும் உடம்பில் துணியுடன் சேர்த்து மதுபாட்டில்களை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், பெண்களின் பைகளிலும் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மதுபாட்டில் கடத்தியது செஞ்சி, மலையரசன் குப்பத்தை சேர்ந்த யசோதா, 77; சின்னப்பாப்பா, 45; என தெரியவந்தது. இருவரை கைது செய்து, 300 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement