மது கடத்திய 2 பெண்கள் கைது

திண்டிவனம்: திண்டிவனம் டவுன் சப்இன்ஸ்பெக்டர் செல்வதுரை தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை செஞ்சி ரோடு பஸ் நிறுத்தில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.
அப்போது, புதுச்சேரிலிருந்து திருவண்ணாமலை சென்ற அரசு பஸ் நிறுத்தி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த 2 பெண்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, 2 பெண்களும் உடம்பில் துணியுடன் சேர்த்து மதுபாட்டில்களை மறைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், பெண்களின் பைகளிலும் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், மதுபாட்டில் கடத்தியது செஞ்சி, மலையரசன் குப்பத்தை சேர்ந்த யசோதா, 77; சின்னப்பாப்பா, 45; என தெரியவந்தது. இருவரை கைது செய்து, 300 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி