ஒக்கலிகர் எம்.எல்.ஏ.,க்கள் இன்று ஆலோசனை கூட்டம்

பெங்களூரு: ''ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக, ஒக்கலிகர் சமுதாய எம்.எல்.ஏ.,க்களுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கையை இன்னும் முழுதாக படிக்கவில்லை. எங்களின் ஒக்கலிகர் சமுதாய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், குமாரபார்க் காந்தி பவன் சாலையில் உள்ள துணை முதல்வரின் அலுவலக இல்லத்தில், நாளை (இன்று) நடக்கிறது. யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.சி., - எஸ்.டி., சமுதாயத்தினரை முன்னேற்றுவதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
அனைத்து சமுதாய மக்களுக்கும் காங்கிரஸ் நீதி கிடைக்க செய்யும். யாருடைய இடஒதுக்கீட்டையும் நாங்கள் அபகரிக்கவில்லை.
இவ்வாறு கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டியது கனமழை; சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமம்!
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!
-
ராமதாஸ் வழிகாட்டுதலில் சித்திரை நிலவு மாநாடு; அன்புமணி பேட்டி
Advertisement
Advertisement