மாணவி பலாத்காரம் வாலிபர் கைது
விருத்தாசலம் : பத்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பெண்ணாடம் வாலிபர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார்.
சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனுாரை சேர்ந்த செந்தில்குமார் மகன் செல்வகுமார் (எ) செல்வம், 23; என்பவர், மாணவியை கடத்திச் சென்று, ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரிந்தது.
புகாரின்பேரில், விருத்தாசலம் மகளிர் போலீசார், செல்வம் மீது போக்சோ மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது
-
நேஷனல் ஹெரால்ட் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் பொறுப்பை ஏற்க வேண்டும்: அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
-
தென்காசி அருகே கொடூர சம்பவம் : மனைவி கண்முன்னே கணவனை வெட்டி தலையை துண்டித்த கும்பல்!
-
போரல் - கே.எல்.ராகுல் ஜோடி நிதான ஆட்டம்; மெல்ல மெல்ல ரன் குவிக்கும் டில்லி
-
உயர்கல்வித்துறை பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்; முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement