சாலை தடுப்பில் வளர்ந்த செடிகள்

ஊத்துக்கோட்டை,:ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி ஆற்றின் கரையில் உள்ள சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆரணி ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இச்சாலையில், திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, இந்த தடுப்புகளில் செடிகள் வளர்ந்து, மாயமாகி வருகிறது. இதனால், இரவு நேரங்களில் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தடுப்புகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement