மனைவியை தாக்கிய கணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருத்தணி:திருத்தணி மசூதி தெருவைச் சேர்ந்தவர் பியாராஜான், 387. இவர், நேற்று இரவு 7:00 மணியளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது, மனைவி சலீமாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த பிராயராஜான், கட்டையால் மனைவியின் தலை மீது தாக்கி விட்டு வெளியே வந்தார்.

அப்போது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருத்தணி அரசு மருத்துவமனையில் சலீமா சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement