ராகுல் - தேஜஸ்வி கூட்டணி பேச்சு

புதுடில்லி : பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு, இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தற்போதே பீஹாரில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், டில்லியில் நேற்று, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உள்ளிட்டோரை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினார்.
அப்போது, பீஹார் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், தொகுதி பங்கீடு, பிரசார திட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ''பீஹார் தேர்தலில், 'இண்டி' கூட்டணி நிச்சயம் வெல்லும். முதல்வர் வேட்பாளர் குறித்து, ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம். முதல்வர் குறித்து பேசி முடிவு எடுப்போம்,'' என்றார்.
மேலும்
-
ஆப்கனில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.9 ஆக பதிவு; மக்கள் சாலையில் தஞ்சம்!
-
பாலஸ்தீனம் மீதான தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் நாட்டினருக்கு தடை விதித்த மாலத்தீவு
-
ரூ.6.80 கோடி போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு நபர் உட்பட 9 பேர் கைது
-
கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு
-
வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை
-
10ம் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேர்: திருச்சியில் மீட்ட போலீஸ்