தாயிடம் கோபம் வாலிபர் தற்கொலை
புதுச்சேரி: தாயிடம் கோபித்து கொண்டு போதையில் இருந்த வாலிபர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி, குருமாம்பேட், அமைதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ், 27, இவரது தந்தை இறந்ததிலிருந்து, அதிகமாக மது குடித்து வந்தார். ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். நேற்று முன்தினம், மது குடித்துவிட்டு, தனது தாயிடம் சாப்பாடு ஊட்டி விடுமாறு கேட்டார். ஏன் குடிக்கிறாய் என கேட்டு விட்டு அவர் படுக்க சென்றார்.
இதனால் தாயிடம் கோபித்து கொண்ட, பிரகாஷ் அறையில், துாக்கிட்டுக்கொண்டார். சத்தம்கேட்டு வீட்டில் இருந்தவர்கள், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனை செய்து, பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.6.80 கோடி போதை பொருள் பறிமுதல் வெளிநாட்டு நபர் உட்பட 9 பேர் கைது
-
கஞ்சா வியாபாரி காலில் சுட்டுப்பிடிப்பு
-
வேலுார் இப்ராஹிமுக்கு வீட்டுச்சிறை மதுரையில் போலீசார் நடவடிக்கை
-
10ம் தேர்வு எழுதிவிட்டு மாயமான மாணவிகள் 5 பேர்: திருச்சியில் மீட்ட போலீஸ்
-
பெண்கள் மீதான வன்முறை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்
-
இன்றைய மின் தடை கள்ளக்குறிச்சி
Advertisement
Advertisement