காயமடைந்த சிறுமி பலி

பேரையூர் : சாப்டூர் தமிழரசன் 59. இவரது மனைவி வளர்மதி 42. மகள் சுபஸ்ரீ 26. பேத்தி இலன்இன்பா 3. இவர்கள் டி. கல்லுப்பட்டியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு நேற்று முன்தினம் காலை சென்று விட்டு மதியம் சாப்டூர் செல்வதற்காக ஆட்டோவில் திரும்பினர்.

டி.கல்லுப்பட்டி --பேரையூர் சாலையில் தம்பிபட்டி அருகே ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த வேன் மீது இவர்கள் வந்த ஆட்டோ மோதியது. இதில் தமிழரசன் இறந்தார்.

வளர்மதி, சுபஸ்ரீ, இலன்இன்பா மூவரும் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர்.

இதில் சிறுமி இலன்இன்பா நேற்று இறந்தார்.

Advertisement