புதிய ரேஷன் கடை திறப்பு விழா

ஆண்டிபட்டி ஆண்டிபட்டி ஒன்றியம் ரங்கசமுத்திரம் ஊராட்சி நாச்சியார்புரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமையில் நடந்தது.

ஆண்டிபட்டி தி.மு.க., நகரச் செயலாளர் சரவணன், ஒன்றியத் துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மகாராஜன் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் விநியோகத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணி, கிளைச் செயலாளர் பாண்டியன், கூட்டுறவுத்துறை சார் பதிவாளர் விஸ்வம், ரெங்கசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளர் முருகேசன், விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement