சாயல்குடி பத்ரகாளியம்மன் பூக்குழி உற்ஸவம்

சாயல்குடி : சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா ஏப்., 8ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

மூலவர் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

ஏப்.,11 மாலை 608 விளக்கு பூஜையும், ஏப்.,13ல் பக்தி பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை பால்குடம் ஊர்வலத்திற்கு பிறகு கோயில் வளாகம் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்களால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

விழா ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement