சாயல்குடி பத்ரகாளியம்மன் பூக்குழி உற்ஸவம்
சாயல்குடி : சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் உற்ஸவ விழா ஏப்., 8ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மூலவர் பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடிப் பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
ஏப்.,11 மாலை 608 விளக்கு பூஜையும், ஏப்.,13ல் பக்தி பஜனை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை பால்குடம் ஊர்வலத்திற்கு பிறகு கோயில் வளாகம் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு நேர்த்திக்கடன் பக்தர்களால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய ஹிந்து நாடார் உறவின்முறை மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும்
-
வேகம் எடுக்கும் பண மோசடி வழக்கு: மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
-
சவுக்கு சங்கர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி; சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
சென்னையில் கொட்டிய கனமழை; நீடிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் தற்கொலைக்கு முயற்சி: சேலம் பஸ்ஸ்டாண்டில் அதிர்ச்சி!