எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நிறைவு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் 28ல் துவங்கி நேற்று (ஏப்.15) உடன் நிறைவு பெற்றது.

கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வில் 12 ஆயிரத்து 295 மாணவர்கள், 12 ஆயிரத்து 704 மாணவிகள், 24 ஆயிரத்து 999 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 11 ஆயிரத்து 912 மாணவர்கள், 12 ஆயிரத்து 545 மாணவிகள் என 24 ஆயிரத்து 457 மாணவர்கள் தேர்வெழுதினர். 542 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தேர்வு முடித்த மாணவர்கள் மகிழ்ச்சியோடு வீடு திரும்பினர்.

மே 19ல் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement