ஜல்லிக்கட்டு மைதான பணி 80 சதவீதம் நிறைவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில், 19ல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இப்போட்டியில், நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 600க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
இதனால், ஜல்லிக்கட்டு மைதானத்தில், கடந்த, 20 நாட்களாக வாடிவாசல், காளைகள் சென்று முடியும் பகுதி, பார்வையாளர்கள் நின்று பார்க்கும் இடம், பேரிகார்டு அமைக்கும் பணி நடந்து வந்தது. இதுவரை இப்பணி, 80 சதவீதம் முடிந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை, நாமக்கல் ஆர்.டி.ஓ., சாந்தி மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசு, ஆர்.ஐ., பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு
-
கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை
-
குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!
-
ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!
-
அந்த நிலையில் நாம் இருந்தால்...?
-
அம்முவும்... நானும்...!
Advertisement
Advertisement