பழுதாகி 7 மாதமாகியும் சீரமைக்காத 'சிக்னல்'
சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் பார்முலா - 4 பந்தயத்தை, கடந்த ஆண்டு ஆக., 31, செப்., 1ம் தேதிகளில், தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் நடத்தியது.
இதற்காக புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அப்போது, அண்ணாசாலை - பல்லவன் சாலை சந்திப்பில் இருந்த சிக்னல் விளக்குகளுக்கான வடம் சேதமானது.
ஏழு மாதங்களாகியும், வடத்தை சீரமைக்காததால், சிக்னல் விளக்குகள் இதுவரை செயல்படவில்லை.
இதனால் தாறுமாறாக செல்லும் வாகனங்களால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
--
இதுகுறித்து ஆய்வாளரிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட இடத்தில் சேதமடைந்த வடத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் வடம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்