சேலம் அறிவுசார் மையத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
சேலம்
சேலம், அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில், மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடி மதிப்பில், சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார். வாசிப்பு அறை, ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மையம், நுாலக மையம் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து கோம்பம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்து, அங்கு சோலார் பேனல் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். மிட்டா புதுார் நவீன எரிவாயு மயானம், ஜோதி டாக்கீஸ் பகுதியில் உள்ள எரிவாயு தகன மேடை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், மாநகர பொறியாளர் செந்தில்குமார் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement