மானசரோவர் யாத்திரை விரைவில் துவக்கம்

புதுடில்லி ;சீனா உடனான சுமுக உறவு காரணமாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை, 5 ஆண்டுகளுக்கு பின் விரைவில் துவங்குகிறது.
கைலாஷ் - மானசரோவர் யாத்திரை கடைசியாக, 2019-ல் நடந்தது. அதன்பிறகு, கொரோனா மற்றும் 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடந்த மோதல் உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டது.
மானசரோவர் ஏரி, சீனாவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட திபெத்தில் இருப்பதே இதற்கு காரணம். கடந்த அக்டோபரில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்திய - சீன எல்லையில் ராணுவத்தை திரும்பப் பெற இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
இதன் தொடர்ச்சியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை இந்த ஆண்டு மீண்டும் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நம் வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ''இந்தியா - -சீனா இடையே விமான சேவையை மீண்டும் துவங்க கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன.
''மேலும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது குறித்தும் இரு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. எனவே, கைலாஷ் - மானசரோவர் யாத்திரை விரைவில் துவங்கப்பட வாய்ப்புள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்