கொங்கண சித்தர்குகையில் பூஜை



மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, வையப்பமலை மலைக்குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் குகையில், வாரம்தோறும் வியாழக்
கிழமை குருவார சிறப்பு பூஜை நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று மதியம், 12:00 மணிக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர், கரும்புசாறு உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மரப்பரை, நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, எலச்சிபாளையம், சின்னமணலி, பெரியமணலி, காளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement