வெவ்வேறு சாலை விபத்தில் பெண் உட்பட 3 பேர் பலி


ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த கேரட்டியை சேர்ந்தவர் மாதையன், 47. மினிடோர் வேன் டிரைவர். கடந்த, 15ல் அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள், 42, என்பவரை வேனில் ஏற்றிக் கொண்டு வேலைக்கு சென்று திரும்பினார்.

மாலை, 5:00 மணியளவில் கெண்டகானப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் உயிரிழந்தார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்தவர் அசோக்குமார், 27, கூலித்தொழிலாளி. இவர், கடந்த, 15ல், ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணியளவில் கண்ணு கண்ணன்கொட்டாய் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்ததில் இறந்தார். நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மோகன்நாத், 45. தற்போது தளியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். கடந்த, 14 இரவு, 8:30 மணியளவில் மூக்கண்டப்பள்ளி அருகே பெங்களூரு - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.அவ்வழியாக வந்த கன்டெய்னர் லாரி மோதியதில் இறந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement