சூறைக்காற்றில் வாழை சேதம்

திருச்சி:துறையூர் அருகே எரகுடி பகுதியில் சூறைக்காற்று வீசியதில், 1,500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே, எரகுடி ஊராட்சி பகுதி விவசாயிகள், 100க்கும் அதிகமான ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். தற்போது, வாழைத்தார் அறுவடை தருவாயில் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறாவளி காற்று வீசியதால், 1,500க்கும் அதிகமான வாழை மரங்கள், தாருடன் முறிந்து சாய்ந்துள்ளன. இதனால், ஏக்கருக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர். சேதத்தை கணக்கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement