சத்துணவு ஊழியர்கள் தேனியில் ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகம் முன், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அகவிலை படியுடனும் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத்தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் பாண்டியம்மாள் துவக்கி வைத்தார்.

முன்னாள் மாவட்டத் தலைவர் ரவி, பிற அரசுத்துறைஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பரமன், முருகேசன், வெங்கட்ராமன், நாகராஜன், ரவிக்குமார், முத்துக்குமார் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் மாவட்டத் தலைவர் தாஜூதீன் நிறைவுரை ஆற்றினார். மாவட்டப் பொருளாளர் கருப்பழகு நன்றி கூறினார்.

Advertisement