அரசு ஊழியர்கள் ஊர்வலம்..

தேனி: அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த வருவாய்த்துறை, கிராம உதவியாளர், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தேனி ஒன்றிய அலுவலகம் முன் ஊர்வலம் துவங்கியது.
இதனை மாநில வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ஊர்வலம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று நிறைவடைந்தது.
அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் உடையாளிதலைமை வகித்தார். வாழ்வூதியம் கோரும் இயக்கத்தின் தலைவர் கிருபாவதி வரவேற்றார். அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் முகமது அலி ஜின்னா உள்பட பலர் பேசினர். வாழ்வூதியம் கோரும் இயக்கத்தின் மாவட்ட நிதி காப்பாளர் தேன்மொழி நன்றி தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement