மொபட் திருடியவர் கைது

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் 10 மொபட்டுகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன் ஆகியோர் நேற்று பின்னலுார் அருகே பைபாசில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, குமாரக்குடி பகுதியில் இருந்து வடலுார் நோக்கி சந்தேகப்படும்படி பைக்கில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், கடலுார் கங்கணாங்குப்பம் காலனியை சேர்ந்த சங்கர்,44; என்பதும், வடலுார், காடாம்புலியூர், காராமணிக்குப்பம், கடலுார், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதி சந்தைகளில் 10 மொபட்டுகளை திருடியது தெரிந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்து, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement