ரவுடி வீடுகளில் திடீர் சோதனை

புதுச்சேரி; புதுச்சேரி நகரப் பகுதியில் கமாண்டோ படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுட்டனர்.

ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜன் ஆகியோர் தலைமையில் காவல்துறை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் நேற்று இரவு புதுச்சேரி நகர பகுதிகள், கடற்கரை சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, சுப்பையா சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement