வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டை சேர்ந்தவர் அழகர்ராஜா 47, இவர் கேரளாவில் இருந்து பலாப்பழம் வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து பலாப்பழம் வாங்கி சரக்கு வாகனத்தில் கடமலைக்குண்டு கொண்டு வந்துள்ளார்.
அவருக்கு உதவியாளராக ஜெயபால் இருந்துள்ளார். ஜெயபால் என்பவருடன் கடமலைக்குண்டை சேர்ந்த செல்வம் அவரது மனைவி செல்வி மகன் விஜய் ஆகியோர் தகராறு செய்து அவருக்கு எதற்கு பலாப்பழம் வெட்டி கொடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். தகராறில் மூவரும் ஜெயபாலை தாக்கியுள்ளனர்.
விலக்கி விடச் சென்ற அழகராஜாவுக்கு காயம் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அழகர் ராஜா புகாரில் செல்வம், செல்வி, விஜய் ஆகியோர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது
Advertisement
Advertisement