தக்காளி விலை கடும் சரிவு 4 கிலோ ரூ.50க்கு விற்பனை

திருப்புவனம் : திருப்புவனத்தில் ஐம்பது ரூபாய்க்கு நான்கு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.
தமிழகத்தில் நாட்டு தக்காளி, பெங்களுரூ தக்காளி என இரண்டு ரகம் பயிரிடப்படுகிறது. நாட்டு தக்காளி பயிரிடுவதுகுறைந்து விட்டதால் பலரும் பெங்களுரூ தக்காளியையே வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று திருப்புவனத்தில்பெங்களுரூ தக்காளி ஐம்பது ரூபாய்க்கு நான்கு கிலோ என சரக்கு வாகனத்தில் கொண்டு வந்து விற்பனை செய்தனர். பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி சென்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், ஒட்டன்சத்திரம் சந்தையில் மொத்தமாக வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்கிறோம், வரத்து அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சந்தையில் டன் கணக்கில் தக்காளி வந்துள்ளதால் விலை பெருமளவு குறைந்து விட்டது என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு
-
3000 ஆண்டு பழமையான கல்வட்டம் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
வனத்துறை சோதனைச்சாவடியில் தானியங்கி பதிவு முறை அமல்; கேரளா வனத்துறை நவீன முயற்சி
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
டில்லியில் சிறுவன் கொலை வழக்கில் பெண் தாதா உட்பட 4 பேர் கைது
Advertisement
Advertisement