ம.தி.மு.க., நிர்வாகக் குழு கூட்டம் துவக்கம்; முடிவில் மாற்றம் இல்லை என்கிறார் துரை வைகோ

சென்னை: சென்னையில் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ''கட்சி பொறுப்பில் இருந்து விலகிய என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை'' என துரை வைகோ நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் துவங்கியது. ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், பொதுச் செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். துரை வைகோ விலகல் குறித்து நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜினாமா நான் கொடுத்தது தான். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நிர்வாகிகள் தங்கள் கருத்தை தலைமையிடம் பிரதிபலிக்கட்டும். ராஜினாமா குறித்து கட்சி மூத்த நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக கூறியிருக்கிறேன்.
ம.தி.மு.க.,தான் வைகோ, வைகோ தான் ம.தி.மு.க., இதில் எந்த மாற்றமும் கிடையாது. என்னால் கட்சிக்குள் எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். கட்சிக்குள், எதனால் பிரச்னை வந்தது என்பது நிர்வாகக்குழு கூட்டத்திற்குப்பின் தெரியும். கட்சியை யாரும் இழிவுபடுத்தாதீர்கள் என்பது தான் எனது அறிவுறுத்தல். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (16)
RAMESH - ,இந்தியா
20 ஏப்,2025 - 18:05 Report Abuse

0
0
Reply
RAMESH - ,இந்தியா
20 ஏப்,2025 - 18:05 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
20 ஏப்,2025 - 16:22 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
20 ஏப்,2025 - 14:31 Report Abuse
0
0
Reply
vijai hindu - ,
20 ஏப்,2025 - 13:47 Report Abuse

0
0
Reply
jaga - ,
20 ஏப்,2025 - 12:00 Report Abuse

0
0
Reply
பிரேம்ஜி - ,
20 ஏப்,2025 - 12:00 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
20 ஏப்,2025 - 15:06Report Abuse

0
0
Reply
hariharan - ,
20 ஏப்,2025 - 11:58 Report Abuse

0
0
Reply
பிரேம்ஜி - ,
20 ஏப்,2025 - 11:56 Report Abuse

0
0
Reply
Nagarajan D - Coimbatore,இந்தியா
20 ஏப்,2025 - 11:55 Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு
-
வாசகர்களை கொண்டோடுகிறோம்!
-
கேரளா, கர்நாடகாவிலும் ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்!
-
முண்டியம்பாக்கத்தில் யார்டு சீரமைப்பு ரயில்கள் தாமதம்
-
தடுப்பணையை சீரமைக்காததால் தண்ணீர் வீணாகும் அவலம்
-
கடலுார், புதுச்சேரியில் 1ம் எண் புயல் கூண்டு
Advertisement
Advertisement