பொன்னேரிக்கரை சாலை சேதம் ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டூ - வீலர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனஙகள் பொன்னேரிக்கரை சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கனரக வாகனங்கள் அதிகம் சென்றதால், ஆங்காங்கே சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சேதமடைந்த சாலை, ‛பேட்ச் ஒர்க்' பணியாக, ரெடிமேட் தார் கலவை வாயிலாக நேற்று சீரமைக்கப்பட்டது.

Advertisement