பள்ளி மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா

பந்தலுார் பந்தலுார் அருகே அம்மன்காவு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படித்த, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கீதா சரஸ்வதி தலைமை வகித்தார். ஆசிரியர் பாக்யராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், 5-ம் வகுப்பு நிறைவு செய்து, 6-ம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாணவர்களுக்கு கணித உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. பெற்றோர் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Advertisement