சென்னையில் மூவருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை: சென்னையில், மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது.
ஆனாலும், கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, 32 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையைச் சேர்ந்த, இரண்டு ஆண்கள், ஒரு பெண் என, மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளனர்.
தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்
-
பணமோசடி வழக்கு; நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
-
நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு
-
ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு
-
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
-
தட்டு வண்டியில் மதுபாட்டில் கடத்தல் திண்டிவனத்தில் வாலிபர் கைது
Advertisement
Advertisement