ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

கண்டமங்கலம் : விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் உள்ளது. நேற்று மாலை, கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி தலைவர் பத்மநாபன், அ.தி.மு.க., ஒன்றிய பாசறை செயலாளர் சின்னபாபுசமுத்திரம் பத்மநாபன் இருவரும் டோல்கேட் வழியாக சென்றனர்.
உள்ளூர்வாசி என்றும், ஊராட்சி தலைவர் என்று கூறி, கட்டணத்தில் விலக்கு அளிக்க கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாதி டோல்கேட் ஊழியர்கள் நீங்கள், உள்ளூர்வாசி இருந்தாலும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பிறகே செல்ல முடியும் என, கூறினர்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஊராட்சி தலைவர், அ.தி.மு.க., நிர்வாகி இருவரையும் தாக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
சத்தீஸ்கரில் முகாமில் மின்சாரம் தாக்கி சி.ஆர்.பி.எப்., வீரர் உயிரிழப்பு
-
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள், அரசு பஸ் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
-
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
-
ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்
Advertisement
Advertisement