ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து 8 பேர் பலி; 6 பேர் படுகாயம்

போபால்: ம.பி.,யில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
ம.பி.,யின் ஜபல்பூர் மாவட்டத்தை பலர் இரண்டு இரண்டு கார்களில் தாமோ மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றுக்கு சென்று கொண்டு இருந்தனர். அதில் ஒரு காரில் 15 பேர் பயணித்தனர். தாமோ மாவட்டத்தில் வறண்ட நதியின் மேல் இருந்த பாலத்தில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 சகோதரிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (2)
Vasan - ,இந்தியா
22 ஏப்,2025 - 20:44 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
22 ஏப்,2025 - 20:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்
-
பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கர்நாடக தொழிலதிபருக்கு ஏற்பட்ட சோகம்; மனைவி கண்ணீர்
-
24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம்: தமிழக அரசு
-
நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி
-
குதிரை மிரண்டதில் சிறுவன் படுகாயம்
Advertisement
Advertisement