காஷ்மீர் தாக்குதல்: அமெரிக்க துணை அதிபர் கண்டனம்

ஜெய்ப்பூர்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், மனைவி உஷா மற்றும் குழந்தைகளுடன் இந்தியா வந்துள்ளார். தற்போது ஜெய்ப்பூரில் அவர் தங்கி உள்ளார்.
இந்நிலையில் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜேடி வான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நானும் உஷாவும் கடும் கண்டனம் தெரவித்து கொள்கிறோம். இந்த நாடு மற்றும் மக்களின் அழகையும் அன்பையும் அனுபவித்து வருகிறோம். இந்த கொடூரமான தாக்குதலில் காயமடைந்தவர்கள் நினைவாக எங்களது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த பதிவில் வான்ஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சம்பள பாக்கி பிரச்னையால் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
-
கடல் காற்றாலைகளில் இருந்து 2000 மெகாவாட் வாங்க முடிவு
-
புதிய சுற்றுலா தலங்களை அடையாளம் காண்பதில் மெத்தனம்: விழிக்குமா சுற்றுலாத்துறை
-
25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலை
-
புறப்பட்டார் புது விஞ்ஞானி உடலில் இருக்கும் மின்சாரமே பட்டாசு விபத்திற்கு காரணம்
-
கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் மோதல்
Advertisement
Advertisement