லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் சஸ்பெண்ட்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராஜிவிடம், வீட்டுமனையை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்வதற்காக, கடந்த 23ம் தேதி 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, விழுப்புரம் நில அளவையர் ஸ்டாலின், 27; நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன், 54; ஆகியோர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் ஸ்டாலினை, நில அளவைத் துறை உதவி இயக்குனர் ஜெயசங்கரும், கிராம உதவியாளர் கிருஷ்ணனை, தாசில்தார் கனிமொழியும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் தாக்குதல்: ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம்
-
இந்தியர்களை பார்த்து பாக்., அதிகாரி செய்த சைகை: கொந்தளித்த நெட்டிசன்கள்!
-
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இந்த கொடூரன் தான்!
-
கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை; சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 500 பேர் கைது
-
சேப்பாக்கத்தில் 'ரோபோ டாக்'
Advertisement
Advertisement