பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.
கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர். அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன.
இவர் 4 ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குல்காமில் மற்றொரு தீவிர பயங்கரவாதி வீடு இடிக்கப்பட்டது. ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (17)
பேசும் தமிழன் - ,
26 ஏப்,2025 - 17:50 Report Abuse

0
0
Reply
PalaniKuppuswamy - sanjose,இந்தியா
26 ஏப்,2025 - 16:04 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
26 ஏப்,2025 - 15:00 Report Abuse

0
0
Reply
திருஞான சம்பந்த மூர்த்தி தாச ஞானஸ்கந்தன் - ,இந்தியா
26 ஏப்,2025 - 14:11 Report Abuse

0
0
Reply
Mettai* Tamil - ,இந்தியா
26 ஏப்,2025 - 13:21 Report Abuse

0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
26 ஏப்,2025 - 13:21 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
26 ஏப்,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
சுந்தர் - ,
26 ஏப்,2025 - 13:18 Report Abuse

0
0
Reply
RK - ,
26 ஏப்,2025 - 13:09 Report Abuse

0
0
Reply
thehindu - ,இந்தியா
26 ஏப்,2025 - 13:04 Report Abuse

0
0
ராமகிருஷ்ணன் - ,
26 ஏப்,2025 - 14:06Report Abuse

0
0
N Sasikumar Yadhav - ,
26 ஏப்,2025 - 19:28Report Abuse

0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
பஹல்காமின் ஹீரோவான குதிரை உரிமையாளர் சங்க தலைவர்
-
உலகத்திற்கு வழிகாட்ட வேண்டியது இந்தியாவின் கடமை: மோகன் பகவத்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; உள்ளூர் பயங்கரவாதிகள் 14 பேர் பெயர் பட்டியல் வெளியீடு
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் பேட்டிங்
-
காஷ்மீர் தாக்குதல்: மத்திய அரசு மீது அவதுாறு பரப்பிய சுந்தரவல்லி; யார் அனுமதிக்காக காத்திருக்கிறது போலீஸ்?
-
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
Advertisement
Advertisement