எலும்பு அறுவை சிகிச்சைக்கு புதிதாக 'ஓ - ஏஆர்எம்' சாதனம்
சென்னை:சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், மூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவை சிகிச்சைகளுக்கான, 'நேவிகேஷன் சிஸ்டம்' உடன் கூடிய, 'ஓ - ஏஆர்எம்' சாதனத்தை, 'இஸ்ரோ' தலைவர் நாராயணன், இரு நாட்களுக்கு முன் துவக்கி வைத்தார்.
செயற்கை நுண்ணறிவால் மேற்கொள்ளப்படும் '2டி, 3டி இமேஜிங்' வழியாக இயங்கும் இச்சாதனம், மிக துல்லியத்துடனும், பாதுகாப்புடனும், மூளை, முதுகுத்தண்டு, எலும்பியல் அறுவை சிகிச்சையை திறம்பட மேற்கொள்ளவும், மருத்துவ நிபுணர்களுக்கு உதவுகிறது.
இதுகுறித்து, மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
நோயாளிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். சென்னையில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், இச்சாதனம், நவீன தொழில்நுட்பங்களுடன் இருக்கிறது.
இவை, நோயாளிகளுக்கு ஏற்படும் இடர்வாய்ப்புகளை குறைப்பதுடன், அறுவை சிகிச்சைக்குப்பின், நோயாளிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான கால அளவையும் குறைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
-
விஜய் உடனான கூட்டணி கதவை மூடினேன்: சொல்கிறார் திருமா!