தேர்வுக்கு பணம் தர மறுப்பு வாலிபர் தற்கொலை
திருபுவனை: புதுச்சேரி திருபுவனை அருகே உள்ள சகடப்பட்டு பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்-தேவி தம்பதியரின் மூத்த மகன் முத்துவேல் 24; இவர் அரசு போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி தனது தந்தையிடம் பணம் கேட்டுள்ளார். தற்போது பணம் இல்லை என அவர் கூறியதால் மனமுடைந்த முத்துவேல் அன்று பகல் 1;00 மணிக்கு வீட்டில் இருந்த எலி மருந்தினை சாப்பிட்டுள்ளார்.
மயங்கி விழுந்த முத்துவேலுவை அவரது குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.15 மணிக்கு முத்துவேல் பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement