வாய்க்கால் துார்வாரும் பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாகூர்: பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில், ராசாகால் மற்றும் உச்சிமேடு வாய்க்காலை, துார்வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட பாகூர் கிழக்கு பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட ராசாகால் வாய்க்காலை 6 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் செலவிலும், உச்சிமேடு வாய்க்காலை 12 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில், துார்வாரி ஆழப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.
இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வாய்க்கால் துார்வாரும் பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம திட்ட ஊழியர் ரதிபாலன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.