மே 4 வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
மானாமதுரை: திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்துாரில்பூர்ண புஷ்கலா தேவி கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மே 4ம் தேதி காலை 7:30 முதல் 8:30 மணிக்குள் நடக்கிறது.
இதற்கான யாகசாலை பூஜை மே 3 காலை 8:00 மணிக்கு ஆரம்பமாகிறது. அன்று மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டுதல், வேதிகா பூஜை, சதுர்வேதி பாராயணம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 4 அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி, ஹோமங்கள், பாராயணத்தை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து அலங்காரம், தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர்வேத பாராயணம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 98941 42409ல் தொடர்பு கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement