திருப்பரங்குன்றத்தில் காரில் திடீர் தீ

திருநகர்: திருப்பரங்குன்றம் வேடர் புளியங்குளம் சிந்தன் நகர் சுந்தரமூர்த்தி நேற்று மாலை திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தும் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவரது மகள் காரை ஓட்டி வந்தார்.
சுந்தரமூர்த்தி மருத்துவமனைக்குள் சென்றார்.அவர் நிறுத்திய காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்த மகள் அருகே உள்ள மெக்கானிக்கை அழைக்க சென்றார். அதற்குள் காரின் முன் பகுதியில் தீ எரிந்தது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் காரின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!
-
மனைவியை கொலை செய்து பரோல் கைதி தற்கொலை
-
கிராம தலைவர் குத்திக்கொலை ஆர்.எஸ்.மங்கலத்தில் பரபரப்பு
-
செவிலியரான துாய்மை பணியாளர் குடந்தை ஜி.ஹெச்.,சில் அவலம்
-
7 பேர் பலியான கார்கள் விபத்தில் நடந்தது என்ன
-
கம்பி வேலியில் சிக்கிய புள்ளி மான் உயிரிழப்பு
Advertisement
Advertisement