இரு குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்றாரா தாய்?

வாழப்பாடி : சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த சின்னத்தம்பி வட்டத்தை சேர்ந்தவர் கொத்தனார் விஜயகுமார், 40. இவரது மனைவி இளவரசி, 34. தம்பதியின் மகன்கள் விக்னேஸ்வரன், 6, சதீஷ்குமார், 3. வீட்டு செப்டிக் டேங்கில் நேற்று இரவு, 8:00 மணிக்கு இரு மகன்களும் மூழ்கி விட்டதாக இளவரசி கதறினார்.

அக்கம்பக்கத்தினர் இரு குழந்தைகளையும் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதேபோல், பாதி மூழ்கிய இளவரசியையும் மீட்டனர்.

வாழப்பாடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் இரு குழந்தைகளும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வாழப்பாடி போலீசார் இளவரசியிடம் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விஜயகுமாருக்கு, இளவரசி மற்றொருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் வலுத்ததால், அடிக்கடி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் இரு குழந்தைகளையும் செப்டிக் டேங்க் தண்ணீரில் துாக்கி வீசி கொலை செய்து, தாய் நாடகமாடலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்கிறோம்' என்றனர்.

Advertisement