நிலக்கரி திருடிய டிரைவர் கைது

விருத்தாசலம்; டாடா ஏஸ் வாகனத்தில் பழுப்பு நிலக்கரி திருடி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மார்க்கெட் கமிட்டி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த டி.என்.31-பி.ஜே.,0563 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வாகனத்தை சோதனை செய்தனர். அதில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி 300 கிலோ இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்த டிரைவர் பார்த்திபன்,36; என்பவரிடம் விசாரணை நடத்தியதில், பழுப்பு நிலக்கரியை திருடி வந்ததை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
-
முஜிபுர் ரஹ்மான் படம் கொண்ட ரூபாய் நோட்டுகள் நிறுத்தம்; நெருக்கடியில் வங்கதேசம்!
Advertisement
Advertisement