உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர், ; திருப்பூர் மாவட்டத்தில், படித்த, வேலை கிடைக்காத இளைஞர்கள் விண்ணப்பிக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளாகியும் வேலைகிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, தமிழக அரசு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கிவருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய்; பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு, 300 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, 600 ரூபாய், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, 750 ரூபாய், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 600 ரூபாய், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவி தொகை வேண்டுவோர், https://employmentexchange.tn.gov.in என்கிற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement